ஆ ந்திராவை சேர்ந்த மனிஷா என்ற பெண், தன் 3 வயது மகனின் மலக்குடல் அறுவை சிகிச்சைக்காக சென்னை வந்துள்ளார்.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்ற மனிஷா, முறையான சிகிச்சையின்மை மற்றும் கையில் பணம் இல்லாத காரணத்தால், மீண்டும் ஆந்திரா புறப்பட்டதாக தெரிகிறது.
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் அவரது சூழ்நிலையை அறிந்த சிலர், ஆம்புலன்சில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உறவினர்களால் கைவிடப்பட்ட தனக்கு யாரும் ஆதரவு இல்லை என்றும், தனது குழந்தையை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும் எனவும் மனிஷா கோரிக்கை விடுத்துள்ளார்.