தற்போதைய செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திய அதிமுக பிரமுகர் - கொடூர கொலை.. காஞ்சியில் பயங்கரம்

தந்தி டிவி
• கிளாய் பகுதியைச் சேர்ந்த நாகராஜன், அதே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் கண்ணன், குமரன், சுந்தரம் , ராஜ்குமார் கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த விஜயகாந்த் ஆகியோருடன் ஒருக்குப்புறமான இடத்தில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். • இதில், கண்ணன் பள்ளியிலிருந்து குழந்தையை அழைத்து வருவதற்காக சென்றுள்ளார். • விஜயகாந்த், கூடுதலாக மது வாங்கி வருவதற்காக ஸ்ரீபெரும்புதூர் சென்றுள்ளார். • பின்னர், விஜயகாந்த் மது வாங்கிக் கொண்டு திரும்பி வந்து பார்த்தபோது, நாகராஜன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். • உடன் மது அருந்திய நண்பர்கள் மாயமாகியிருந்தனர். • இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். • கொலை செய்யப்பட்ட நாகராஜன் மீது, அடிதடி, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. • போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"