தற்போதைய செய்திகள்

இலங்கை அகதி ராஜனை சிறப்புமுகாமுக்கு மாற்றும் விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு கெடு விதித்த உச்சநீதிமன்றம்

தந்தி டிவி
• இலங்கை அகதி ராஜனை சிறப்பு முகாமுக்கு மாற்ற தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் 24 மணி கெடு விதித்துள்ளது. • கொலை குற்றத்துக்காக தண்டனை பெற்று 35 ஆண்டுகளுக்கு மேல் சிறையிலுள்ள இலங்கை அகதி ராஜன், தன்னை முன் கூட்டியே விடுவிக்க கோரிய மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு நிறைவேற்றப்பட்டு விட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். • இதற்கு மனுதாரர் தரப்பில் உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. • தமிழ்நாடு அரசின் சார்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிபதிகள் 24 மணி நேரத்துக்குள் சிறப்பு முகாமுக்கு ராஜனை மாற்ற வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என தெரிவித்தனர். • இலங்கை அகதி ராஜன் முன் விடுதலை குறித்து மீண்டும் பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு மூன்று வாரம் அவகாசம் அளித்து விசாரணையை ஏப்ரல் 17 - ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை