இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வரவுள்ளார். அவரது இந்த பயணம் இருநாடுகளுக்கு இடையிலான நீண்ட கால உறவுகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பின், முதல்முறையாக இந்தியா வரவுள்ள விக்ரமசிங்கே, குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேச உள்ளார்.