தற்போதைய செய்திகள்

வேகமெடுக்கும் கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி-யின் அடுத்தகட்ட முடிவு...

தந்தி டிவி

கொடநாடு வழக்கு தொடர்பாக நடைபெற்ற சிபிசிஐடி ஆலோசனை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், உதகை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதன்படி நீலகிரி முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவை மீண்டும் அழைத்து விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ஆய்வாளராக பணியாற்றிய ஜான், கூடலூர் முன்னாள் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோருக்கு சம்மன் அனுப்பவும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று கூடலூர் பகுதி சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல் துறையினர், காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களை விசாரிக்கவும், சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?