தற்போதைய செய்திகள்

வேகமெடுக்கும் கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி-யின் அடுத்தகட்ட முடிவு...

தந்தி டிவி

கொடநாடு வழக்கு தொடர்பாக நடைபெற்ற சிபிசிஐடி ஆலோசனை கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, சிபிசிஐடி எஸ்.பி. மாதவன் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம், உதகை அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும், அதன்படி நீலகிரி முன்னாள் காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பாவை மீண்டும் அழைத்து விசாரிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு ஆய்வாளராக பணியாற்றிய ஜான், கூடலூர் முன்னாள் ஆய்வாளர் சக்திவேல் ஆகியோருக்கு சம்மன் அனுப்பவும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. சம்பவத்தன்று கூடலூர் பகுதி சோதனை சாவடியில் பணியில் இருந்த காவல் துறையினர், காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்களை விசாரிக்கவும், சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்