தற்போதைய செய்திகள்

அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு பூஜை

தந்தி டிவி

கேரள மாநிலம், பாலக்காட்டில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள வடக்காஞ்சேரியில் உள்ள மகா கணபதி கோயிலில், கேரள பெண் ஒருவரின் நன்கொடையில் அஷ்ட திரவிய மகா யாகமும் பூஜையும் நடைபெற்றது. அரிக்கொம்பன் யானையின் உடல் நலம் சீராக இருக்கவும், அந்த யானையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் இந்த பூஜை நடைபெற்றுள்ளது. அரிக்கொம்பன் யானை, கேரளாவில் இருந்து தமிழகத்தை நோக்கி சென்றாலும், அந்த யானையை நேசிக்கும் மக்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"