தற்போதைய செய்திகள்

பாடலாசிரியர் கபிலன் மகள் தற்கொலை - விசாரணையில் வெளிவந்த பகீர் தகவல்

தந்தி டிவி

தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கபிலனின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தமிழ் திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான கபிலனின் மகள் தூரிகை.. இவர் ஆங்கில நாளேட்டில் பத்திரிக்கையாளராகவும், திரையுலகில் ஆடை வடிவமைப்பாளராகவும் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், தூரிகை நேற்று மாலை அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதனையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியான நிலையில், போலீசார் அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால், தூரிகை தற்கொலை செய்து கொண்டதாக, முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"