சூரிய கிரகணத்தை ஒட்டி ஒடிசாவில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் மாலை 4.30 மணியில் இருந்து சூரிய கிரகணம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடிக்கும் சூரிய கிரகணத்தை இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பார்க்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் சூரிய கிரகணத்தை ஒட்டி, ஒடிசாவில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், நீதிமன்றங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு கூறியுள்ளது.