தற்போதைய செய்திகள்

சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் - காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம்

தந்தி டிவி

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மரியாதை

காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு நாளை முன்னிட்டு ராமாபுரம் காது கேளாதோர் பள்ளி மாணவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஐயா பவுண்டேஷன் நிறுவன தலைவர் ராஜ்குமார் தலைமையில் ராமாபுரம், எம்ஜிஆர் தோட்டத்தில் வைக்கப்பட்டு இருந்த டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் வாய் பேச முடியாதோர் மற்றும் காதுகேளாதோர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கப்பட்டது. இதில் தட்சண மாற நாடார் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு