தற்போதைய செய்திகள்

பச்சிளம் பெண் குழந்தையை பேரம் பேசி ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்த பெற்றோர் - சிவகாசியில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன் , பஞ்சவர்ணம் தம்பதியினர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். • அவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் 4-வதாக ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. • அக்குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த குழந்தை இல்லாத ஜார்ஜ் - அயரின் தம்பதியினருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. • இது குறித்து பஞ்சவர்ணம் தாய் அளித்த தகவலின் பேரில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. • போலீசார் குழந்தையை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். • குழந்தையை விற்ற பெற்றோர் பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் , உடந்தையாக இருந்த கிராமப்புற செவிலியர் முத்துமாரி, மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் அஜிதா, குழந்தையை விலைக்கு வாங்கிய அயரின் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். • தலைமறைவாக உள்ளஅயரின் கணவரான நாகர்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையார் ஜார்ஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை