தற்போதைய செய்திகள்

பச்சிளம் பெண் குழந்தையை பேரம் பேசி ரூ.40 ஆயிரத்துக்கு விற்பனை செய்த பெற்றோர் - சிவகாசியில் அதிர்ச்சி

தந்தி டிவி
• சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தை சேர்ந்த பாண்டீஸ்வரன் , பஞ்சவர்ணம் தம்பதியினர் பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகின்றனர். • அவர்களுக்கு ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் 4-வதாக ஒரு மாதத்திற்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. • அக்குழந்தையை நாகர்கோவிலை சேர்ந்த குழந்தை இல்லாத ஜார்ஜ் - அயரின் தம்பதியினருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக கூறப்படுகிறது. • இது குறித்து பஞ்சவர்ணம் தாய் அளித்த தகவலின் பேரில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. • போலீசார் குழந்தையை மீட்டு மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். • குழந்தையை விற்ற பெற்றோர் பாண்டீஸ்வரன்- பஞ்சவர்ணம் , உடந்தையாக இருந்த கிராமப்புற செவிலியர் முத்துமாரி, மாரனேரி அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் அஜிதா, குழந்தையை விலைக்கு வாங்கிய அயரின் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். • தலைமறைவாக உள்ளஅயரின் கணவரான நாகர்கோவில் மத்திய கூட்டுறவு வங்கி மேற்பார்வையார் ஜார்ஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி