தற்போதைய செய்திகள்

விளையாட்டு போட்டிகளுக்கு வழங்கப்பட்ட நிதியில் ரூ. 1.25 லட்சம் மோசடி செய்த பெண்... தீவிர விசாரணையில் லஞ்ச ஒழிப்பு போலீசார்

தந்தி டிவி
• சிவகங்கையில் ஒன்றேகால் லட்ச ரூபாய் கையாடல் செய்ததாக முன்னாள் மாவட்ட விளையாட்டு பெண் அலுவலர் மீது லஞ்ச ஒழிப்புபோலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். • கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகங்கையில் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணிபுரிந்த கீதா என்பவர், தற்போது வேலூர் மாவட்டத்தில் கோகோ மற்றும் கபடி வீரர்களுக்கு பயிற்றுநராக பணிபுரிந்து வருகிறார். • அவர் சிவகங்கையில் பணிபுரிந்த காலத்தில் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை நடத்த 8 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வழங்கியது. • ஆனால் இப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட189 வீரர்களுக்கு 3 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தாமல், போலியாக ஆவணங்கள் தயாரித்து ஒன்றேகால் லட்ச ரூபாய் மோசடி செய்ததாக கீதா மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர். • அவரிடம் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்