• கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரில் ஏரியில் மூழ்கி அக்காள் மற்றும் தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
• முருகன் என்பவரது குழந்தைகள் புவனா மற்றும் விக்னேஷ். பள்ளி விடுமுறை என்பதால் இருவரும் விறகு எடுப்பதற்காக அருகில் இருந்து ஏரிக்கு சென்றுள்ளனர்.
• பின்னர், இருவரும் ஏரியில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
• பின்னர், தகவலறிந்து வந்து உடல்களை மீட்ட போலீசார் பிரேத சோதனைக்காக மத்தூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.