டெல்லியில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தாவின் எலும்புகள் மற்றும் உடல் பாகங்கள், அவரது தந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
டெல்லியில், ஷ்ரத்தா என்ற இளம்பெண்ணை அவரது காதலர் அப்தாப் கொலை செய்து, உடல் பாகங்களை 35 துண்டுகளாக வெட்டி, வனப்பகுதியில் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், மெஹ்ராலி மற்றும் குருகிராம் காடுகளில் சில எலும்பு மாதிரிகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த எலும்பு மாதிரிகள் ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.