தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் சர்வர் கோளாறு காரணமாக X-RAY முடிவுகள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுவதால், முடிவுகள் தெரியாமல் நோயாளிகள் அவதிடைந்தனர்.

தந்தி டிவி

அரசு மருத்துவமனையில் சர்வர் கோளாறு காரணமாக X-RAY முடிவுகள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுவதால், முடிவுகள் தெரியாமல் நோயாளிகள் அவதிடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பல்வேறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் X-RAY பிரிவில், சர்வர் கோளாறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், நீண்ட நாட்களாக X-RAY முடிவுகள், வாட்ஸ்ஆப் செயலி மூலமாக, மருத்துவர்களுக்கு பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏராளமான நோயாளிகள் X-RAY எடுத்து வரும் சூழலில், நோயாளிகளின் முடிவுகள் சில நேரங்களில் மாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் குழம்பிபோய் உள்ளனர். அதேபோல் X-RAY முடிவுகள் நோயாளிகளின் கைகளில் கிடைக்க முடியாத நிலை உள்ளதால், உடனடியாக சர்வர் கோளாறு சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி