தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் சர்வர் கோளாறு காரணமாக X-RAY முடிவுகள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுவதால், முடிவுகள் தெரியாமல் நோயாளிகள் அவதிடைந்தனர்.

தந்தி டிவி

அரசு மருத்துவமனையில் சர்வர் கோளாறு காரணமாக X-RAY முடிவுகள் வாட்ஸ் அப் மூலம் பகிரப்படுவதால், முடிவுகள் தெரியாமல் நோயாளிகள் அவதிடைந்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், பல்வேறு நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் X-RAY பிரிவில், சர்வர் கோளாறு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், நீண்ட நாட்களாக X-RAY முடிவுகள், வாட்ஸ்ஆப் செயலி மூலமாக, மருத்துவர்களுக்கு பகிரப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏராளமான நோயாளிகள் X-RAY எடுத்து வரும் சூழலில், நோயாளிகளின் முடிவுகள் சில நேரங்களில் மாறிவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவர்கள் குழம்பிபோய் உள்ளனர். அதேபோல் X-RAY முடிவுகள் நோயாளிகளின் கைகளில் கிடைக்க முடியாத நிலை உள்ளதால், உடனடியாக சர்வர் கோளாறு சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை