தற்போதைய செய்திகள்

"பெண் போராட்டக்காரர்களை ஒடுக்க பாலியல் சித்ரவதை'' -ஈரான் சமூக ஆர்வலர் பரபரப்பு குற்றச்சாட்டு

தந்தி டிவி

ஈரானில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பெண்கள் பாலின ரீதியாகவும் உடல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுகின்றனர் என அதிரடி குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் டிஎச்ஆர்சி மனிதவுரிமை அமைப்பின் பேச்சாளருமான நர்கீஸ் முகம்மதி, ஈரானில் உள்ள ஈவின் சிறையில் நீண்ட சிறைவாசத்தில் இருந்துவருகிறார். கடந்த செப்டம்பரில் மாஷா அமினி எனும் 22 வயது இளம்பெண் கலாச்சார போலீஸால் தாக்கி கொல்லப்பட்டதால், அந்த நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் பரவிய போராட்டத்தைக் கட்டுப்படுத்த, முன்னணி போராட்டக்காரர்களை ஈரான் அரசு கடுமையாக ஒடுக்கியது. நூற்றுக்கணக்கானவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். போராட்டத்தின்போது காரில் தூக்கிச் செல்லப்பட்ட முன்னணி பெண் செயற்பாட்டாளர் ஒருவரை, ஈவின் சிறை அதிகாரிகள் பாலினரீதியில் சித்ரவதை செய்துள்ளனர் என்று முகம்மதி குற்றம்சாட்டியுள்ளார்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை