தற்போதைய செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை?.. போக்சோவில் சிக்கிய அரசு பள்ளி ஆசிரியர் - சிவகங்கையில் அதிர்ச்சி

தந்தி டிவி

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்

கட்டானிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில் விநாயக சவுத்ரி என்பவர் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் அதே பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில், விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆசிரியர்

விநாயக் சவுத்ரி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா