தற்போதைய செய்திகள்

பெண்ணுடன் பாலியல் உறவு..? ஜன்னலில் தூக்கில் தொங்கிய மடாதிபதி - 2 பக்க கடிதத்தில் பல அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி

கர்நாடகாவில் இரண்டு பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு மடாதிபதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராம்நகர் மாவட்டத்தில் உள்ள காஞ்சக்கல் பாண்டே மடத்தில் மடாதிபதியாக இருந்த பசவலிங்கம், தனது அறையின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்பாக அவர் எழுதிய கடிதத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதில், மடாதிபதி பொறுப்பை தட்டிப்பறிக்க முயன்ற சிலர் தன் மீது அவதூறு சுமத்துவதாக கூறி, அவர்களின் பெயரை கடிதத்தில் மடாதிபதி குறிப்பிட்டுள்ளதாக, முதற்கட்ட விசாரணையில் கூறப்படுகிறது.

அதேநேரம், மடாதிபதியுடன் பாலியல் உறவில் இருந்த பெண், வீடியோ எடுத்து அவரை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. 

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி