தற்போதைய செய்திகள்

உயிர்பலி வாங்கும் கழிவுநீர் தொட்டிகள் - மேலும் ஒரு தொழிலாளி சடலமாக மீட்பு

தந்தி டிவி

கரூரில் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளர்கள் பலியான சம்பவத்தில் மேலும் ஒரு கட்டிட தொழிலாளியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

கரூரை அடுத்த சுக்காலியூர் பகுதியில் கழிவுநீர் தொட்டியில் இறங்கிய மோகன்ராஜ், ராஜேஷ்குமார் மற்றும் சிவகுமார் ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தில் கட்டிட மேஸ்திரி கார்த்திக் மற்றும் வீட்டின் உரிமையாளர் குணசேகரன் ஆகியோர் மீது தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகுமாருடன் பணிக்கு சென்ற கோபால் என்பவரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அதே கழிவு நீர் தொட்டியில் இருந்து கோபாலின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்