தற்போதைய செய்திகள்

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி... அகதிகளாக இந்தியா வரும் ஈழ தமிழர்கள்

தந்தி டிவி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்குள்ள தமிழர்கள் வாழ வழி இன்றி அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட 3 பேர் தனுஷ்கோடியில் தஞ்சம் அடைந்தனர். அவர்களை மீட்ட கடலோரக் காவல்துறையினர் மண்டபம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இவர்கள் அகதிகள் மறுவாழ்வு முகாமில் ஒப்படைக்கபட உள்ளனர். மேலும் இலங்கையில் இருந்து படகில் தமிழகத்திற்கு வர தங்கள் உடைமைகளை விற்று 1 லட்ச ரூபாய் இலங்கை ரூபாய் மதிப்பில் கொடுத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் அகதிகளாக 251 இலங்கை தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ள நிலையில் இன்று மேலும் 3 பேர் வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு