தற்போதைய செய்திகள்

மனைவிக்கும் நண்பருக்கும் தகாத உறவு.. பேப்பரில் எழுதி காட்டிய கணவன்.. பரிதாபத்தின் உச்சம்

தந்தி டிவி
• செஞ்சி அடுத்த ஜம்போதி கிராமத்தை சேர்ந்தவர் சத்யராஜ். • இவரும் அதே கிராமத்தை சேர்ந்த சசிகலா என்பவரும் கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். • இதில், சத்யராஜ் சென்னையில் தங்கி கேட்டரிங் தொழில் செய்து வந்துள்ளார். • இந்நிலையில், செஞ்சி அருகேயுள்ள சங்கராபரணி ஆற்று பாலத்தில் சத்யராஜ் கழுத்தறுக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்ததை கண்டு பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். • இதையடுத்து, சத்யராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். • இதில், சத்யராஜால் பேச இயலாத நிலையில், தனது இந்த நிலைக்கு காரணம் தனது மனைவியும், அவருடன் தகாத உறவில் இருந்த ஜான் என்பவர் தான் என பேப்பரில் எழுதி காண்பித்துள்ளார். • இதையடுத்து, சத்யராஜின் மனைவி சசிகலா மற்றும் அவரின் ஆண் நண்பரான ஜெகனை போலீசார் கைது செய்துள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை