சென்னை பெருங்குடி ஜெம் மருத்துவமனையில் உடல் பருமன் மற்றும் சர்க்கரை நோய் குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்க மாநாட்டை இந்திய இ.என்.டி சங்க முன்னாள் தலைவரும், பேராசிரியருமான மருத்துவர் கே.கே.ராமாலிங்கம் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் அறுவை சிகிச்சை துறை இயக்குநர் மற்றும் தலைவர் மருத்துவர் பிரவீன் ராஜ், சிறப்பு மருத்துவர் ஜெயந்த், உணவியல் நிபுணர்கள், மருத்துவ உளவியலாளர்கள் உள்ளிட்ட மருத்துவ துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.