தற்போதைய செய்திகள்

பட்டியலின மக்கள் குறித்து விமர்சித்ததாக குற்றச்சாட்டு... நாதக - திமுக இடையே பயங்கர கைகலப்பு ... நடுரோட்டில் சாலை மறியல் செய்த நாம் தமிழர் கட்சி

தந்தி டிவி
• பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜி புரம் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையே கைகலப்பு ஏற்பட்டது. • நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பட்டியல் இன மக்களை அவதூறாக பேசியதாக கூறப்பட்டது. • இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில், அக்கட்சியினர் வாக்கு சேகரிக்க பட்டியில் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். • ராஜாஜி புரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சியினரைவாக்கு சேகரிக்க வரக்கூடாது என திமுகவினர் கூறியதால், இருதரப்பினருடைய கைகலப்பு ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் படுகாயம் அடைந்தனர். • இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து ராஜாஜிபுரம் பகுதியில் இரு கட்சியினர் கூடியதால் பதட்டத்தை தணிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை