• பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி ராஜாஜி புரம் பகுதியில் பிரசாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சி மற்றும் திமுக இடையே கைகலப்பு ஏற்பட்டது.
• நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பட்டியல் இன மக்களை அவதூறாக பேசியதாக கூறப்பட்டது.
• இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில், அக்கட்சியினர் வாக்கு சேகரிக்க பட்டியில் இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
• ராஜாஜி புரம் பகுதியில் வாக்கு சேகரிக்க வந்த நாம் தமிழர் கட்சியினரைவாக்கு சேகரிக்க வரக்கூடாது என திமுகவினர் கூறியதால், இருதரப்பினருடைய கைகலப்பு ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் படுகாயம் அடைந்தனர்.
• இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.தொடர்ந்து ராஜாஜிபுரம் பகுதியில் இரு கட்சியினர் கூடியதால் பதட்டத்தை தணிக்கும் வகையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.