தற்போதைய செய்திகள்

பழங்குடியினர் சாதிச்சான்று வழங்க பள்ளி மாணவர்கள் போராட்டம்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதியில், பழங்குடியினர் சாதி சான்று வழங்கக்கோரி 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கடம்பூர் மலைப்பகுதியில் வசித்து வரும் மலையாளி இன மக்களுக்கு சாதிச்சான்றிதழில் இதர வகுப்பினர் என வழங்கப்படுகிறது. இந்நிலையில், தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் இன சான்று வழங்க வலியுறுத்தி, பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப்பணி மற்றும் அரசு உதவிகள் கிடைக்காமல், உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்