தற்போதைய செய்திகள்

பேங்க் ஆப் இந்தியா வங்கியில் தீ விபத்து.. முக்கிய ஆவணங்கள் எரிந்து நாசம்?

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில் உள்ள வங்கி அலுவலகம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அபாய மணி ஒலித்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாப்பூர் கச்சேரி சாலையில் பேங்க் ஆப் இந்தியா வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை கரும்புகை வெளியேறி அபாய மணி ஒலித்த‌து.

அருகில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தீப்பிடித்த‌து தெரிய வந்த‌தால், தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர்.

3 வண்டிகளில் விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

அதிகாலை நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில், கணினிகள், குளிர்சாதனப் பெட்டிகள் எரிந்து சேதமடைந்துள்ளன.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை