தற்போதைய செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு.. பெண் போலீஸ் அளித்த பகீர் சாட்சியம் | Father | Son

தந்தி டிவி

சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகிய 2 பேரும் சாத்தான்குளம் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கின் முக்கிய சாட்சியான தலைமை காவலர் ரேவதி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களின் வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். இதையடுத்து வழக்கானது ஜனவரி 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ