தற்போதைய செய்திகள்

சங்கரன்கோவில் அருகே, தொழிலதிபர் வீட்டில் 53 சவரன் நகை, வைரம் திருடியது தொடர்பாக பணிப்பெண், அவரது கணவர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
• திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ரகுபதி என்ற தொழிலதிபர், குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு, வீடு திரும்பினார். • குடும்ப உறுப்பினர்கள் அணிந்திருந்த நகைகளை கழற்றி பீரோவில் வைத்து விட்டு, அவற்றை சரிபார்த்த போது, ஒரு வைர கம்மல், 53 சவரன் நகை மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். • இது குறித்த புகாரின் பேரில், ரகுபதி வீட்டில் பணியாற்றிய மகேஸ்வரி என்பவரிடம் போலீசார் விசாரித்தனர். • முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், நகைகள் திருடியதை ஒப்புக் கொண்டார். • பின்னர், 53 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மகேஸ்வரி, அவரது கணவர் துளசி ஆகியோரை கைது செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை