தற்போதைய செய்திகள்

கீழே கிடந்த கருப்பு நிற சூட்கேஸ்.. திறந்து பார்த்து அதிர்ந்த தூய்மை பணியாளர்

தந்தி டிவி

சூலூரில் தூய்மை பணியாளரிடம் சிக்கிய துப்பாக்கி, போலீஸ் விசாரணையில் பொம்மை துப்பாக்கி என தெரியவந்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் அருகே, பேரூராட்சி தூய்மை பணியாளர் ஒருவர் தூய்மை பணியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது கீழே கிடந்த சிறிய அளவிலான கருப்பு நிற சூட்கேஸை திறந்து பார்த்த அவர், அதில் துப்பாக்கி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

துப்பாக்கியை வீட்டிற்கு எடுத்துச் சென்ற அவர், பின்பு போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீசார் துப்பாக்கியை சோதித்து பார்த்த நிலையில், அது ஏர்கன் எனப்படும் விளையாட்டு துப்பாக்கி என்பது தெரியவந்தது.

இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்