தற்போதைய செய்திகள்

மீண்டும் கேரளாவை மிரட்டும் அதே விபத்து - ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பலி

தந்தி டிவி

கேரள மாநிலம் கோட்டயம் அருகே, படகு கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்தனர்.

உதனாபுரம் பகுதியைச் சேர்ந்த சரத் என்பவர், உறவினரின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக, தனது குடும்ப உறுப்பினர்கள் ஆறு பேரை அழைத்துக் கொண்டு வைக்கம் நோக்கி படகில் சென்றார். அப்போது, எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்ததில், சரத், அவரது சகோதரியின் மகன் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நான்கு பேரை, அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். கேரளாவில், ஏற்கனவே சுற்றுலா படகு கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் படகு கவிழ்ந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’