• தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கு திருமணமாகி, மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
• பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படையில், பிரபாகரன் 2 ஆம் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார்.
• கடந்த சில தினங்களுக்கு முன்பு, தனது சொந்த ஊரான சிறுவாச்சூருக்கு பிரபாகரன் சென்றபோது, அங்கு 17 வயது சிறுமியை காதலிப்பதாகக் கூறி கர்ப்பமாக்கியதாக கூறப்படுகிறது.
• சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ வழக்கில் பிரபாகரன் கைது செய்யப்பட்டார்.
• பின்னர் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட பிரபாகரன், போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச் சென்றார்.
• இதுதொடர்பாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, பிரபாகரன், இருசக்கர வாகனத்தில் காத்திருந்த நபரின் உதவியுடன் தப்பிச் சென்றது தெரியவந்தது.
• தப்பியோடிய பிரபாகரனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.