தற்போதைய செய்திகள்

"கணவனை களவாடிய தோழி"... கண்ணீருடன் காவல் நிலையம் சென்ற மனைவி

தந்தி டிவி
• சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனது கணவரை தன்னுடன் படித்த தோழி கடத்திச் சென்று விட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • பாகல்பட்டி கிராமம் செங்கானூர் பகுதியில் மோகன்குமார் முனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். • முனியம்மாளின் வீட்டிற்கு, அவரது தோழி கலையரசி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். • அப்போது, மோகன்குமாருக்கும், கலையரசிக்கும் இடையே பழக்கம் ஏறபட்டுள்ளது. • இந்த நிலையில், கலையரசியும், மோகன்குமாரும் மாயமானதாக கூறப்படுகிறது. கணவரை எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி முனியம்மாள், தோழி கலையரசி தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார். • இதனிடையே, தனது மனைவியை மோகன்குமார் கடத்திச் சென்று விட்டதாக, கலையரசியின் கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். • புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார், மோகன்குமார் மற்றும் கலையரசியை தேடி வருகின்றனர்.

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு

CM Vijay | TN Crop Loan Waiver | 100% பயிர்க்கடன் தள்ளுபடி - முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு

ADMK | ``ராஜினாமா செய்த 4 MLA-க்கள்.. கைமாறிய பெருந்தொகை'' - மனுதாரர் சொன்னதும் ஐகோர்ட் கேட்ட கேள்வி