தற்போதைய செய்திகள்

"கணவனை களவாடிய தோழி"... கண்ணீருடன் காவல் நிலையம் சென்ற மனைவி

தந்தி டிவி
• சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, தனது கணவரை தன்னுடன் படித்த தோழி கடத்திச் சென்று விட்டதாக பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • பாகல்பட்டி கிராமம் செங்கானூர் பகுதியில் மோகன்குமார் முனியம்மாள் தம்பதியினர் வசித்து வருகின்றனர். • முனியம்மாளின் வீட்டிற்கு, அவரது தோழி கலையரசி என்பவர் அடிக்கடி வந்து சென்றுள்ளார். • அப்போது, மோகன்குமாருக்கும், கலையரசிக்கும் இடையே பழக்கம் ஏறபட்டுள்ளது. • இந்த நிலையில், கலையரசியும், மோகன்குமாரும் மாயமானதாக கூறப்படுகிறது. கணவரை எங்கு தேடியும் கிடைக்காததால், அவரது மனைவி முனியம்மாள், தோழி கலையரசி தனது கணவரை கடத்திச் சென்று விட்டதாக புகார் அளித்தார். • இதனிடையே, தனது மனைவியை மோகன்குமார் கடத்திச் சென்று விட்டதாக, கலையரசியின் கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். • புகார்களை பெற்றுக்கொண்ட போலீசார், மோகன்குமார் மற்றும் கலையரசியை தேடி வருகின்றனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி