தற்போதைய செய்திகள்

அரசு பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... விடைத்தாள் தைக்கும் பணியில் மாணவிகள்... - இணையத்தில் பரவிய வைரல் வீடியோ!

தந்தி டிவி
• சேலம் அரசு பள்ளியில் விடைத்தாள் முகப்பு பகுதி தைக்கும் பணியில் மாணவிகள் ஈடுபடுத்தப்பட்ட விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் சிறப்பு தையல் ஆசிரியர் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். • சேலம் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10, 12-ம் வகுப்பு மாணவிகளைக் கொண்டு விடைத்தாள் முகப்பு பகுதியில் தைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. • இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இதுகுறித்து தந்திடிவியில் செய்தி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்தது. • இந்த நிலையில் இந்த வீடியோ தொடர்பாக விசாரணை நடத்த தேர்வுத்துறை இயக்குனர் சேது ராமவர்மா பரிந்துரை செய்திருந்தார். • இதன் அடிப்படையில் சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் வீடியோ தொடர்பாக அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் விசாரணை நடத்தினார். • விசாரணைக்கு பிறகு, பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்வாணி மற்றும் சிறப்பு தையல் ஆசிரியர் செல்வி ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே