தற்போதைய செய்திகள்

பொங்கலை முன்னிட்டு களை கட்டிய மண்பானை விற்பனை

தந்தி டிவி

வரும் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

இதை முன்னிட்டு மண் பானை, மண் அடுப்பு உள்ளிட்ட பொருள்கள் செய்யும் பணியில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் மண்பாண்ட பொருள்களை செய்வதில் தொழிலாளர்கள் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் சுமார் 60 மண்பாண்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனா தொற்றால் சரியான வருமானம் இல்லாமல் இருந்த நிலையில், வரும் ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்காக தங்கள் பணிகளை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், மண்பாண்டங்கள் செய்ய போதுமான அளவு களிமண் கிடைக்காமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ள தொழிலாளர்கள், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்