தற்போதைய செய்திகள்

கள்ளச்சாராயம் விற்பனை - 6 பெண்கள் அதிரடி கைது

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கள்ளச்சாராயம் விற்பனை செய்த 6 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

அரகண்டநல்லூர் காவல் நிலைய பகுதிக்கு உட்பட்ட வசந்த கிருஷ்ணாபுரம், காடகனூர், வீரபாண்டி, ஒட்டம்பட்டு ஆகிய பகுதிகளில் சாராய விற்பனை ஜோராக நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதை தொடர்ந்து அந்தப் பகுதிகளுக்கு சென்ற போலீசார், சாராய விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வீரபாண்டி கிராமத்தை சேர்ந்த வள்ளி, தனபாக்கியம், நிர்மலா, வசந்த கிருஷ்னாபுரம் கிராமத்தைச் சேர்ந்த அலமேலு, காடகனூர் பகுதியை சேர்ந்த மல்லிகா மற்றும் ஒட்டம்பட்டு பகுதியை சேர்ந்த பவுனு என 6 பெண்களை கைது செய்தனர். இந்த 6 பேரிடம் இருந்து 60 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. 

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்