தற்போதைய செய்திகள்

சென்னை ரயில் நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு தங்க கட்டிகள் பறிமுதல்

தந்தி டிவி

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புபடை போலீசார், சந்தேகத்துக்கிடமான பார்சல்கள் மற்றும் நபர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, குண்டூரை சேர்ந்த சாம்பசிவராவ் என்பவரின் உடைமைகளை பரிசோதனை செய்தபோது, 100 கிராம் எடை கொண்ட 8 தங்க கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்