தற்போதைய செய்திகள்

சென்னை ரயில் நிலையத்தில் ரூ.40 லட்சம் மதிப்பு தங்க கட்டிகள் பறிமுதல்

தந்தி டிவி

உரிய ஆவணங்களின்றி எடுத்து வரப்பட்ட 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புபடை போலீசார், சந்தேகத்துக்கிடமான பார்சல்கள் மற்றும் நபர்களை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது, குண்டூரை சேர்ந்த சாம்பசிவராவ் என்பவரின் உடைமைகளை பரிசோதனை செய்தபோது, 100 கிராம் எடை கொண்ட 8 தங்க கட்டிகள் இருப்பதை கண்டுபிடித்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால், 40 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து, வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Palani Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறங்கி அலசும் பத்திரப்பதிவு துறை

Senthilbalaji | ``கண்டிப்பாக நான்..’’ - வட்டமிடும் போலீஸ்.. செந்தில் பாலாஜி எடுத்த ட்விஸ்ட் முடிவு

Parliament session | பிரதமர், முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதா..வெளியான முக்கிய அறிவிப்பு

Breaking | TASMAC | டாஸ்மாக் கடைகளில் எச்சரிக்கை | சுகாதாரத் துறைக்கு பறந்த உத்தரவு

Kaveri | Karnataka | தண்ணீர் திறந்துவிடும் சமயத்தில்..போர்க்கொடி தூக்கிய பாஜக..பரபரக்கும் கர்நாடகா