இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 750 கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பான புகாரில், கான்பூரை சேர்ந்த ரோட்டோமேக் குலோபல் நிறுவனத்தின் இயக்குநர்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. ரோட்டோமேக் குலோபல் நிறுவனத்தின் இயக்குநர்களான சாதனா கோத்தாரி, ராகுல் கோத்தாரி வங்கி முறைகேடு செய்தததில் 750 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், மோசடி குற்றச்சதி, ஊழல் தடுப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் டெல்லி சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது