தற்போதைய செய்திகள்

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட் - இயந்திர சோதனை வெற்றி..!

தந்தி டிவி

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட வளாக மையம் அமைந்துள்ளது.

இங்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திரங்களின் சோதனை நடைபெறும். .

இந்நிலையில், மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் ககன்யான் திட்டத்தின்படி விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இயந்திரத்தின் பரிசோதனை நடைபெற்றது.

கிரையோஜெனிக் எந்திரத்தின் சி.20 இ11 எம்.கே.111 பரிசோதனை 28 விநாடிகள் நீடித்தது.

இந்த சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மைய வாளாக இயக்குனர் பத்ரி நாராயணமூர்த்தி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்த சோதனை நடைபெற்றது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்