தற்போதைய செய்திகள்

"நான் நாய் இல்ல போலீஸ்"... குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க காவல் பணியில் இனி 'ரோபோ நாய்'

தந்தி டிவி
• 88 லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூயார்க் நகரில, 2022இல் ஒரு லட்சத்து 26 ஆயிரம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. • 433 கொலை குற்றங்கள் நடந்தன. நியூயார்க் நகர காவல் துறையில் 36 ஆயிரம் காவலர்கள் பணி புரியும் நிலையில், குற்றங்களை தடுக்க டிஜிடாக் என்ற ரோபோ நாய் ஒன்றை பணியில் ஈடுப்படுத்தியுள்ளனர். • ஹுன்டாய் நிறுவனத்திற்கு சொந்தமான பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ரோபோ நாய், ரீமோட் கண்ட்ரோல் முறையில் இயக்கப்படுகிறது. • சுரங்க நடைபாதைகள், ஆபத்தான பகுதிகள், கட்டுமானம் நடைபெறும் இடங்கள் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் இந்த ரோபோ நாய் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. • ஆபத்தில் சிக்கும் மனிதர்களுக்கு உதவி செய்யும் திறன் கொண்ட இந்த ரோபோ நாயிடம் மனிதர்கள் தொடர்பு கொள்ள முடியும். • தப்பிச் செல்லும் கார்களில் ஜி.பி.எஸ் கருவியை பொருத்தும் எந்திரத்தையும் நியுயார்க் காவல் துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு

BREAKING || தூத்துக்குடி +2 மாணவி கொடூர கொலையில் அடுத்த அதிரடி

BREAKING || பிரபல ரவுடி பட்டப்பகலில் சரமாரி வெட்டி கொலை - பெரும் பரபரப்பில் புதுக்கோட்டை