தற்போதைய செய்திகள்

17 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய நிருபர்.. தாயும் உடந்தையான கொடூரம் - திருச்சியில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருச்சியில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பத்திரிக்கையாளர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதாகவும், பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாகவும் வந்த தகவலை அடுத்து, கன்னியாகுமரியை சேர்ந்த கிறிஸ்டல்ராஜ், திருச்சியை சேர்ந்த ரமீஜா பானு ஆகியோரை கைது செய்தனர்.

இது சம்மந்தமாக பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பான விசாரணையில், கைதான கிறிஸ்டல்ராஜ், மாதாந்திர பத்திரிக்கையல் நிருபராக பணியாற்றி வருவதும், ரமீஜா பானுவுடன் சேர்ந்து பல பெண்களை அவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட சிறுமியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கிறிஸ்டல்ராஜ், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் அம்பலமானது. இந்த கொடூர செயலில், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் நித்யாவும் உடந்தையாக இருந்தது அம்பலமானதை அடுத்து, அவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்