தற்போதைய செய்திகள்

மகள் திருமணத்திற்காக சென்ற போது... சாலையில் ஏற்பட்ட பயங்கரம்... பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!

தந்தி டிவி

ராணிப்பேட்டை மாவட்டம், பெல் நரசிங்கபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதி ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏழுமலை என்பவர் தனது சகோதரியின் மகள் திருமணத்திற்காக சென்று கொண்டிருந்த போது சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அவரது இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்