தற்போதைய செய்திகள்

திமுக - அதிமுகவினரிடையே வாக்குவாதம்... சாலையில் கோலம் போட்டதை தட்டிக் கேட்டதால் தகராறு

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த தொகுதிக்கு உள்பட்ட அசோகாபுரத்தில், திமுகவினர் பல்வேறு சாலைகளில், திமுக கொடி மற்றும் உதயசூரியன் சின்னத்தை கோலங்களாக வரைந்திருந்தனர்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளர் கே.சி. கருப்பண்ணன் திமுகவினரிடம் கேட்டபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அப்போது, விதிமுறைகளை மீறி கோலங்கள் போட்டது குறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க இருப்பதாக கருப்பண்ணன் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்