தற்போதைய செய்திகள்

திமுக - அதிமுகவினரிடையே வாக்குவாதம்... சாலையில் கோலம் போட்டதை தட்டிக் கேட்டதால் தகராறு

தந்தி டிவி

ஈரோடு கிழக்கு தொகுதியில், தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக, அதிமுகவினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

அந்த தொகுதிக்கு உள்பட்ட அசோகாபுரத்தில், திமுகவினர் பல்வேறு சாலைகளில், திமுக கொடி மற்றும் உதயசூரியன் சின்னத்தை கோலங்களாக வரைந்திருந்தனர்.

இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சரும் தேர்தல் பொறுப்பாளர் கே.சி. கருப்பண்ணன் திமுகவினரிடம் கேட்டபோது, இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வந்த போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

அப்போது, விதிமுறைகளை மீறி கோலங்கள் போட்டது குறித்து தேர்தல் அலுவலரிடம் புகார் அளிக்க இருப்பதாக கருப்பண்ணன் கூறினார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்