மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்டுள்ள கர்நாடக ரத்னா விருதை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்நிலையில், அவரது கலைப்பணி மற்றும் சமூக சேவை ஆகியவற்றை கருத்திற்கொண்டு அவருக்கு உயரிய விருதான கர்நாடகா ரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக கர்நாடகா முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்தார்.
நவம்பர் 1-ஆம் தேதி இந்த விருதை வழங்குவதற்காக, நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவரது கரங்களால் விருது வழங்கப்படவுள்ளது.