தற்போதைய செய்திகள்

கூடையில் ரூ.2 கோடி பணம்.. ரூ.71 லட்சம் தங்கம்.. தங்கை திருமணத்துக்கு ரூ.8 கோடிக்கு சீர்.. ஜாம் ஜாமென நடத்திய அண்ணன்கள்

தந்தி டிவி
• இந்தியாவில் வரதட்சணை கொடுப்பது தண்டனைக்குரிய குற்றம் என்றாலும், ராஜஸ்தானின் நாகௌர் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவில் வரதட்சணை கொடுக்கப்பட்டுள்ளது. • அங்குள்ள நாகௌர் மாவட்டத்தில் உள்ள திங்காசாகர் கிராமத்தை சேர்ந்த பன்வாரி தேவிக்கு மார்ச் 26-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. • இந்த திருமணத்துக்கு தேவியின் 4 சகோதரர்கள் 8 கோடியே 31 லட்ச ரூபாய் வரதட்சணை கொடுத்துள்ளனர். • அந்த தொகையில், 2 கோடியே 21 லட்ச ரூபாய், கூடையில் வைத்து கொண்டு வரப்பட்டு, மேடையிலேயே ரொக்கப் பணமாக கொடுக்கப்பட்டது. • இதவிர, நான்கரை கோடி மதிப்புள்ள நிலம், 71 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம், 9 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ வெள்ளி என மொத்தம் 8 கோடியே 31 லட்ச ரூபாய் வரதட்சணையாக வழங்கப்பட்டது. • மேலும், 7 லட்ச ரூபாய் மதிப்பிலான டிராக்டர் ஒன்றும் வரதட்சணையாக வழங்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை