தற்போதைய செய்திகள்

ரக்கூன் நாய்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவியதா கொரோனா வைரஸ்..? புதிய ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

தந்தி டிவி
• சீனாவின் ஊஹான் நகரில் 2019இன் இறுதியில் உருவான கொரோனா தொற்று, உலகம் முழுவது பரவிய பின், இதுவரை 68 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். • ஊஹான் நகரின் சந்தை ஒன்றில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளைப் பற்றிய புதிய ஆய்வு முடிவு ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. • இந்த மாதிரிகளில், கொரோனா வைரஸின் மரபணுக்களுடன், ரேக்கான் நாய் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளின் மரபணுக்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. • சில மாதிரிகளில், மனித மரபணுக்களை விட விலங்குகளின் மரபணுக்களின் அளவு மிக அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. • விலங்குகளில் கொரோனா நோய் தொற்று ஏற்பட்டதற்கு இது ஆதாரமாக உள்ளதாக இந்த ஆய்வறிக்கை கூறுகிறது. • அமெரிக்க அரசின் பல்வேறு புலனாய்வு அமைப்புகள், கொரோனாவின் தோற்றுவாய் தொடர்பாக சேகரித்த தரவுகள் அனைத்தையும் வெளியிட வகை செய்யும் சட்ட மசோதாவில் ஜோ பைடன் திங்களன்று கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை