தற்போதைய செய்திகள்

வீட்டிற்குள் புகுந்து 12 பேரை கடித்து குதறிய வெறிநாய் - ஆரணியில் அதிர்ச்சி

தந்தி டிவி

ஆரணி அருகே சிறுவன் உட்பட 12 பேரை வெறிநாய் கடித்து குதறியதால், கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மேல்சீசமங்கலம் பகுதியில், வெறிநாய்கள் சுற்றி திரிவதாக புகார்கள் எழுந்தன.

இந்நிலையில் வீட்டிற்குள் புகுந்த வெறிநாய் ஒன்று, சிறுவன் உட்பட 12 பேரை கடித்து குதறி தப்பிச் சென்றது.

காயமடைந்த 12 பேரும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் கிராம மக்களை கடித்து குதறிய வெறிநாயை தேடி பிடித்து, அடித்து கொன்று புதைத்து விட்டனர்.

வீட்டிற்குள்ளேயே புகுந்து வெறிநாய் கடித்துள்ள சம்பவம், அப்பகுதி மக்களை பீதியடைய வைத்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை