தற்போதைய செய்திகள்

"ஒரு ஊரையே காலி செய்ய வைத்த குவாரி" ... கொட்டும் மழையில் கால்நடைகளுடன் வெளியேறிய அவலம்

தந்தி டிவி

ஒசூர் அருகே கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், இரண்டாவது முறையாக ஊரைக் காலி செய்து விட்டு குழந்தைகள், கால்நடைகளுடன் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூரை அடுத்த கொரட்டகிரி கிராமத்தைச் சுற்றியுள்ள கல் குவாரிகளில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு டிப்பர் லாரிகள், கிராமம் வழியாக செல்வதால், சாலைகள் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டு எந்த தீர்வும் கிடைக்காததால், ஏற்கெனவே ஒரு முறை ஊரை காலி செய்து, வெளியேறி போராட்டம் நடத்திய கிராம மக்கள் மீண்டும் தங்கள் கால்நடைகளுடன் ஊரைக் காலி செய்து விட்டு, ஊருக்கு வெளியே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் கூடாரம் அமைத்து தங்கினர்.

தகவல் அறிந்து வந்த தேன்கனிக்கோட்டை போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், அவர்கள் சமாதானம் அடையாததால் போராட்டம் தொடர்ந்தது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்