தற்போதைய செய்திகள்

"தமிழகத்தை அதிக நெல் விளைவிக்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும்" - விருது பெற்ற விவசாயி வசந்தா கோரிக்கை

தந்தி டிவி

தமிழக விவசாயிகள், செம்மை நெல் சாகுபடியில் ஈடுபட்டு, தமிழகத்தை அதிக நெல் விளைவிக்கும் மாநிலமாக உயர்த்த வேண்டும் என்று விருது பெற்ற விவசாயி வசந்தா கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், கள்ளம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன்-வசந்தா தம்பதி, தூத்தூர் மலை அடிவாரத்தில் 6 ஏக்கர் நிலத்தில் எலுமிச்சை, கரும்பு, நெல் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு தமிழ்நாட்டின் சிறந்த விவசாயிக்கான "நாராயணசாமி நாயுடு விருதை" சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அதன் பிறகு சொந்த ஊருக்குத் திரும்பிய வசந்தா கணேசன் தம்பதி, தந்தி டிவிக்கு சிறப்பு பேட்டி அளித்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்