• புதுச்சேரி சட்டமன்றத்தில், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு, தனது தோட்டத்தில் விளைந்த பலாப்பழங்களை பா.ஜ.க. எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் வழங்கினார்.
• சட்டப்பேரவை வளாகத்திற்குள் வந்து நின்ற மினி லாரியில் பலாப்பழங்கள் இருந்ததால், அதனை பலரும் ஆவலோடு பார்த்தனர்.
• இந்நிலையில், பாஜக எம்.எல்.ஏ கல்யாண சுந்தரத்தின் உதவியாளர்கள், பலாப்பழத்தினை இறக்கி, எம்.எல்.ஏவுக்கு இரண்டு பழம் என அனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் விநியோகம் செய்தனர்.
• பேரவை கூட்டம் முடிந்தவுடன் அமைச்சர்களுக்கு, கல்யாணசுந்தரம் நேரடியாக சென்று பலாப்பழத்தை வழஙகினார்.