தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த 'பி.எஸ்.எல்.வி -சி55'

தந்தி டிவி

விண்வெளி துறையில் அளப்பரிய சாதனைகளை செய்துவரும் இஸ்ரோ, வர்த்தக நோக்கில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணிற்கு ஏவி வருகிறது. சிங்கப்பூர் நாட்டின் பூமியை கண்காணிக்கும் டெலியோஸ்-2 செயற்கைக்கோள், லூமிலைட்-4 தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருதது. அதன்படி பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து மதியம் 2.19 மணிக்கு சீறி பாய்ந்த ராக்கெட் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டத்தை வெற்றிகரமாக்கிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்தார்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்