தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்த 'பி.எஸ்.எல்.வி -சி55'

தந்தி டிவி

விண்வெளி துறையில் அளப்பரிய சாதனைகளை செய்துவரும் இஸ்ரோ, வர்த்தக நோக்கில் வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணிற்கு ஏவி வருகிறது. சிங்கப்பூர் நாட்டின் பூமியை கண்காணிக்கும் டெலியோஸ்-2 செயற்கைக்கோள், லூமிலைட்-4 தொழில்நுட்ப செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்ப இஸ்ரோ ஒப்பந்தம் செய்திருதது. அதன்படி பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் மூலம் சிங்கப்பூர் நாட்டின் செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணிற்கு அனுப்பியது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து மதியம் 2.19 மணிக்கு சீறி பாய்ந்த ராக்கெட் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தியது என இஸ்ரோ தெரிவித்துள்ளது. திட்டத்தை வெற்றிகரமாக்கிய விஞ்ஞானிகளுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வாழ்த்து தெரிவித்தார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்