தற்போதைய செய்திகள்

பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு - ஆர்டிஓ காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறி அழுத பெண்கள்

தந்தி டிவி

காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கிராம மக்கள், வருவாய் கோட்டாட்சியரின் காலில் விழுந்து கதறி அழுதனர். 146 நாட்களாக போராட்டம் நடத்தி வரும், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தியபோது, திடீரென்று அவருடைய காலில் விழுந்து பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. விளை நிலங்களையும், வீடுகளையும் அழித்து விட்டு, விமான நிலையம் அமைக்க கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

Puducherry | BJP | பாஜக தேர்தல் பொறுப்பாளரை சந்தித்த புதுச்சேரி முதல்வர்..

Breaking | Supreme Court | CJI திடீர் விலகல்.. ECI ஆணையர்கள் நியமன வழக்கில் பரபரப்பு திருப்பம்

Election Commission || "இதையும் சமர்ப்பிக்க வேண்டும்" - தேர்தல் ஆணையம் போட்ட ஸ்ட்ரிக்ட் ஆர்டர்

Guindy Park | கிண்டி சிறுவர் பூங்காவில் கொத்து கொத்தாக பறவைகள் மரணம்.. பதற்றத்தில் சென்னை மக்கள்

TVK Vijay Interview | இரண்டாவது ரவுண்டில் விஜய் - பரபரக்கும் பனையூர்