தற்போதைய செய்திகள்

மோசமான சாலைகளுக்கு எதிரான நூதன பிரச்சாரம் - பள்ளங்களில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

தந்தி டிவி

மோசமான சாலைகளுக்கு எதிரான நூதன பிரச்சாரம் - பள்ளங்களில் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்

கர்நாடகாவில் சாலைகள் மிக மோசமாக இருப்பதை கண்டிக்கும் விதமாக நூதன பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. கர்நாடகாவின் ஆவேரி மாவட்டத்தில் செல்பி வித் பாத்ஹோல் என்ற தலைப்பில் இளைஞர்கள் சாலை பள்ளங்களுடன் செல்ஃபிக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். பெங்களூரு நகரில் தீபாவளிக்கு இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்த நபர் மோசமான சாலையால் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், மோசமான சாலைகளை சரி செய்யாமல் மெத்தனமாக இருக்கும் அரசை கண்டிக்கும் விதமாக பள்ளங்களில், தீபங்களை ஏற்றி தீபாவளியை கொண்டாடினர். இதேபோல் மதசார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்தவர்களும் சாலைப் பள்ளங்களில் பட்டாசுகளை வெடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?